search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை வரி"

    • முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    • வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கு எப்பொழுதும் நிரந்தர வருவாய் ஈட்டி தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் அமைந்துள்ளது. இந்த தொழிலையே நம்பி செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் பத்திரப்பதிவின் சேவை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    பவர் பத்திரத்திற்கான கட்டணம் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கிரையப் பத்திரம் செய்யும்போது 7 சதவீத பத்திர கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் இவற்றில் ஒரு சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய வீட்டுமனையில் அமைந்துள்ள குறைந்த அளவில் உள்ள சாலையை ஒட்டி புதிய லே-அவுட் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    • சேவை வரியை செலுத்துமாறு உணவகங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
    • சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம்.

    உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, உணவு சாப்பிட்டதற்கான ரசீதில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது என்றும், வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூலிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

    சேவை வரியை செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், சேவை வரியை செலுத்துவது நுகர்வோரின் விருப்பம் என்பது அவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உணவு சாப்பிட்டதற்கான விலை ரசீதில் சேவை வரி சேர்த்து வசூலிக்கக்கூடாது என்றும், மொத்தத் தொகையில் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு விதிகளை மீறி சேவை வரியை விதித்தால் அதனை நீக்குமாறு உணவகத்திடம் வாடிக்கையாளர் முறையிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து 1915 அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலம் நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும், மேலும் நுகர்வோர் ஆணையத்திடம் அவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்விவகாரத்தில் விரைவான தீர்வுகாண www.e-daakhil.nic.in என்ற இணையதளம் மூலம் புகார் பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×